Selasa, 30 Ogos 2011

Charles Santiago

Charles Santiago


ஒற்றுமையாக நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 30 Aug 2011 09:52 PM PDT

மூலம் – மலேசியா இன்று & செம்பருத்தி

Monday, August 29, 2011 9:30 pm

கடந்த சனிக்கிழமை கம்போங் ராஜா ஊடாவிலுள்ள போர்ட் கார்டன் மசூதியில், நமது முஸ்லிம் சகோதர சகோதிரிகளோடு ஒன்றிணைந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற சார்ல்ஸ் சந்தியாகோ. அந்நிகழ்ச்சியில் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் ஏழை எளிய முஸ்லிம்களுக்கும் பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

விலை வாசி ஏறிக் கொண்டிருக்கும் இக்காலக்  கட்டத்தில், இந்தப்  பெருநாள் காலங்களில் இவர்களின் சுமையை குறைக்க இந்த அன்பளிப்பு பேருதவியாக இருக்கும் என கூறினார்  சார்ல்ஸ்.

நோன்புப் பெருநாள்  என்பது முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் அல்ல. முஸ்லிம்கள் மட்டும் கொண்டாட வேண்டிய பெருநாள் அல்ல.  மலேசியர்களாகிய நாம் எம்மதமும்  பாராது அனைவரும் ஒன்றாய் ஒற்றுமையாகக் கொண்டாட வேண்டிய நாள்.

ஆக, நல்லிணகத்தைப் பேண அனைவரும் ஒன்றிணைந்து இந்த நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம் எனக் கூறி மலேசியர்கள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொண்டார் சார்ல்ஸ் சந்தியாகோ.

 


Tiada ulasan:

Catat Ulasan